யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்தவர்களை ஏற்றிவந்த சொகுசு பேருந்து மோதி மீன் வியாபாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அல்லைப்பிட்டியை சேர்ந்த கண்ணதாஸ் பிரேமதாஸ் எனும் மீன் வியாபாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சொகுசு பேருந்து
யாழ்ப்பாணத்தில் இருந்து நயினாதீவு நோக்கி பயணித்த சொகுசு பேருந்து , யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை வீதியில் , அல்லைப்பிட்டி சந்திக்கு அருகில் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மீன் வியாபாரியை மோதியதில் வியாபாரி சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் வியாபாரியின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக , யாழ் . போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் , ஊர்காவற்துறை காவல்துறையினர் விபத்து தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

