முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாடாளுமன்றத்தில் தற்போது பலவீனமடைந்த எதிர்க்கட்சி! முன்னாள் ஜனாதிபதி ரணில் கவலை

நாடாளுமன்ற ஜனநாயகத்தில் எதிர்க்கட்சியின் செயற்பாடுகள் மிக முக்கியம் என்பதை
உணர வேண்டும். ஆனால் இன்று எதிர்க்கட்சி பலவீனமாகவே உள்ளது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய மற்றும் எதிர்கால அரசியல் போக்கு குறித்து ஐக்கிய மக்கள்
சக்தி உறுப்பினரான வருண ராஜபக்ஷ மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ்
சேனாநாயக்க உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுடன் இடம்பெற்ற
கலந்துரையடல் ஒன்றின் போதே ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் தெளிவுபடுத்துகையில்,

“ஜனநாயக நாட்டுக்கு எதிர்க்கட்சியின் செயல் திறன் மிகவும் முக்கியமானது.
ஆனால், எதிர்காலத்தில் கட்சி அரசியல் தோல்வியடைந்து, தனிநபர்களைச் சுற்றியே
அரசியல் தீர்மானிக்கப்படும். இருப்பினும் நாடாளுமன்ற ஜனநாயகத்தில்
எதிர்க்கட்சியின் செயற்பாடுகள் மிக முக்கியம் என்பதை உணர வேண்டும்.

பரந்துபட்ட செயற்பாடு.. 

ஆனால்,
இன்று எதிர்க்கட்சி பலவீனமாகவே உள்ளது. எதிர்க்கட்சியாகப் பரந்துபட்டுச்
செயற்படாமல், சில நபர்கள் மட்டுமே எதிர்க்கட்சியாகச் செயற்படுகின்றனர்.

நாடாளுமன்றத்தில் தற்போது பலவீனமடைந்த எதிர்க்கட்சி! முன்னாள் ஜனாதிபதி ரணில் கவலை | Ranil Concerned Says Currently Weakened Opposition

உதாரணமாக சாமர சம்பத், தயாசிறி ஜயசேகர போன்றவர்கள் உள்ளனர்.

உத்தேச பொதுக் கூட்டணியின் தலைமைத்துவத்தை ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக்கொள்ள
முயற்சிக்கின்றது.

இதற்கு நான் இணங்கமாட்டேன் என்று கருதுகின்றனர்.
அவ்வாறில்லை. ஆவர்களின் கோரிக்கையை நான் ஏற்றுக்கொண்டால், கூட்டணியின்
எதிர்காலம் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் திட்டம் என்ன என்ற கேள்வி
உள்ளது.

பிளவுபட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரு
கட்சிகள் மட்டுமல்லாமல், அனைத்து கட்சிகளும் அரசியல் நிலப்பரப்பில் மறைந்து
போகலாம்.

இலங்கையில் மட்டுமல்ல, முழு உலகிலும் ‘தனிநபரை சார்ந்த அரசியல்
உருவாகி வருகின்றது. உலகெங்கிலும் கட்சிக் கட்டமைப்புகளை விட, தனிநபர்களின்
ஆளுமை மற்றும் செல்வாக்கைச் சுற்றியே அரசியல் முடிவுகள் எடுக்கப்படும் ஒரு
காலகட்டம் வரும்” என்றார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.