இலங்கை சுங்கத் துறையால் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்கள், உற்பத்தி செய்யப்பட்ட நாட்டிலிருந்து வேறு நாட்டிலிருந்து இறக்குமதி செய்வதற்காக, இம்மாதம் 24 ஆம் திகதிக்கு முன்னர், கடன் கடிதத்தைத் திறந்து, அவற்றுடன் தொடர்புடைய சுங்கக் கட்டணங்கள் தொடர்பான புதிய வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவதாக சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அவர் இன்று(22.10.2025) கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.
இலங்கை சுங்கத் துறையால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தொடர்புடைய வாகனங்களை விடுவிப்பதற்கான உத்தரவைப் பிறப்பிக்கக் கோரி, வாகன இறக்குமதியாளர்களால் தாக்கல் செய்யப்பட்ட சுமார் 15 அடிப்படை உரிமை மனுக்கள் இன்று மேல்முறையீடு செய்யப்பட்டது.
சட்டத்திற்கு எதிரான முடிவு
இதன்போது நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை சுங்கத் துறையின் சார்பில் முன்னிலையான மேலதிக மன்றாடியர் நாயகம் சுமதி தர்மவர்தன் ஆகியோரால் இந்த அறிவிப்பு வழங்கப்பட்டது.

மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, தமது வாடிக்கையாளர்களின் வாகனங்களைத் தடுத்து வைக்க இலங்கை சுங்கத் துறை எடுத்த முடிவு சட்டத்திற்கு எதிரானது என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு வர்த்தமானி அறிவிப்புகள் இருப்பதாகவும், அந்த வர்த்தமானி அறிவிப்புகளின்படி, சம்பந்தப்பட்ட வாகனங்களை சுங்கத்துறை தடுத்து வைப்பது சட்டத்திற்கு எதிரானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
800 முதல் 900 வாகனங்கள்
இலங்கை நிதி மற்றும் சுங்க அமைச்சகத்தின் செயலாளருக்காக முன்னிலையான மேலதிக மன்றாடியர் நாயகம் சுமதி தர்மவர்தன், இந்த முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 800 முதல் 900 வாகனங்கள் இலங்கை சுங்கத்துறையால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

அந்த வாகனங்களில் 90 அல்லது 100 வாகனங்கள் தொடர்பாக இந்த நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இருப்பினும், இந்த வாகனங்கள் தொடர்பான கூடுதல் கட்டணம் மற்றும் சுங்கக் கட்டணங்கள் தொடர்பான புதிய வர்த்தமானி அறிவிப்பு இந்த மாதம் 24 ஆம் திகதிக்கு முன் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

