முன்பள்ளி
மற்றும் அடுத்த ஆண்டு தரம் 1 இல் இணையும் மாணவர்களுக்கான கண் பரிசோதனை
நடவடிக்கைகளையும் பல தரப்பினருடன் இணைந்து முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
தெளிந்த பார்வை,
ஒளிமயமான எதிர்காலம்’ என்ற நூல் ஆளுநர் செயலகத்தில் வைத்து இன்று (31) ஆளுநரால் வெளியிட்டு வைக்கப்பட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநர் மேலும் தெரிவிக்கையில், இந்தச்
செயற்றிட்டம் இலங்கையின் ஏனைய மாகாணங்களுக்கு முன்னுதாரணமானது. எமது
மாகாணத்துக்கு கிடைத்த வரப்பிரசாதம்.
கண்ணில் குறைபாடு
கண்பார்வை குறைபாட்டுடன் இருந்த எமது மாகாணப் பிள்ளைகளுக்கு இன்று புதிய
உலகத்தை காணும் வாய்ப்பு கிடைத்திருக்கின்றது.

அவர்களது கல்வி மேம்பாட்டுக்கு
வழி கிடைத்திருக்கின்றது. பல பிள்ளைகள் குறைபாடுகள் இருந்தாலும்
மருத்துவமனைக்குச் செல்வதில்லை. பலருக்கு தங்கள் பிள்ளைகளுக்கு கண்ணில்
குறைபாடு உள்ளது என்பதே தெரியாது.
இவை எல்லாவற்றையும் மாற்றியமைக்கும்
வகையில், பிள்ளைகளை தேடிச் சென்று நடத்திய இந்தச் செயற்றிட்டம்
முறியடித்திருக்கின்றது.
கண்ணாடி வழங்க திட்டம்
இந்தத் திட்டத்துக்கு எங்கள் அதிகாரிகள் பலர் ஒத்துழைப்பு
வழங்கியிருக்கின்றார்கள். ஆரம்பத்தில் சிலர் இந்தத் திட்டம் ஏன் என்று
யோசித்தவர்கள் கூட திட்டத்தின் நன்மையறிந்து பின்னர் ஒத்துழைப்பு
நல்கியிருக்கின்றார்கள்.

மருத்துவ நிபுணர் மலரவனால் முன்வைக்கப்பட்டுள்ள
பரிந்துரைகளை கவனத்திலெடுத்து தொடர்ந்தும் திட்டம் நடைமுறையாக
ஒத்துழைப்புக்கள் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.






