அநுராதபுரம் – குருநாகல் வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று முன் தினம் இரவு அலுத்வெவ
பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அநுராதபுரம் நோக்கிப் பயணித்த கார் ஒன்று வீதியில் பயணித்த பாதசாரி மீது
மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழப்பு
விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலையில்
சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

காரின் சாரதி காயமடைந்த நிலையில் அநுராதபுரம் வைத்தியசாலையில்
சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பில் அநுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.

