இலங்கையில் அரச சேவைகளுக்கான டிஜிட்டல் பணம் செலுத்துவதை இயக்கும்
பாதுகாப்பான இணைய வழி தளமான GovPay, இதுவரை 1 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான
பரிவர்த்தனைகளைச் செயல்படுத்தியுள்ளது.
பணம் செலுத்துவதை எளிதாக்கல்
வரிகள், அபராதங்கள், பயன்பாட்டு பில்கள், கல்விக் கட்டணங்கள் மற்றும் பிற அரசு
சேவைகளுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான பணம் செலுத்துவதை எளிதாக்கும்
வகையில் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்த தளமானது இன்றுவரை 40,920 பரிவர்த்தனைகளை நிறைவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பரிவர்த்தனை மதிப்பு
இந்த பரிவர்த்தனைகளின் மதிப்பு 1,001,469,008 ரூபா ஆகும்.
இந்த நிலையில், சுமார் 200 அரசு நிறுவனங்கள் தற்போது GovPay அமைப்புடன்
இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

