யாழில் (Jaffna) இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை
செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று இரவு யாழ்ப்பாணம் – வடமராட்சி, கரணவாய் கூடாவளவு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கொலை செய்யப்பட்டவர் ராஜகுலேந்திரன் பிரிந்தன் என்றும் அவர் பிரான்ஸ் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
விசாரணை
தற்போது சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை நெல்லியடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்

