இந்த ஆண்டு இதுவரை சுமார் 6,700 சைபர் குற்றங்கள் பதிவாகியுள்ளது.
இலங்கை கணினி அவசர பதிலளிப்பு குழு (SLCERT) இதனை தெரிவித்துள்ளது.

நிதி மோசடி வழக்குகள்
பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் சுமார் 600 அவமதிப்பு, அச்சுறுத்தல் மற்றும் நிதி மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, பெண்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் சைபர் குற்றங்களால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

