யாழ்ப்பாணம் சாவகச்சேரி பழைய காவல் நிலைய வீதியில் உள்ள
காதலனின் வீட்டில் நகை திருடிய குற்றச்சாட்டில் கிளிநொச்சியை சேர்ந்த காதலியான யுவதி
சாவகச்சேரி காவல் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினரால் கைது
செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
சாவகச்சேரியை சேர்ந்த இளைஞரும் கிளிநொச்சி
பகுதியை சேர்ந்த யுவதியும் காதலித்து வந்த நிலையில் இருவருக்கும்
திருமணத்திற்கான நாள் நிச்சயிக்கப்பட்ட நிலையில் காதலி அண்மைய நாட்களாக
காதலனின் வீட்டில் தங்கியுள்ளார்
நகையை காணவில்லை என முறைப்பாடு
இந்த நிலையில் கடந்த 5 ஆம் திகதி காதலனின்
தாய் வீட்டில்வைத்த தாலிக்கொடி உட்பட்ட 8பவுண் தங்க நகைகள் காணாமல்
போயுள்ளதாக
17 ஆம் திகதி காதலனின் தாயாரால் சாவகச்சேரி காவல் நிலையத்தில் முறைப்பாடு
பதிவுசெய்யப்பட்டிருந்தது

இதனையடுத்து சாவகச்சேரி
காவல் நிலைய போதைப் பொருள் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை உப பரிசோதகர்
மயூரன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட விசாரணையில் கிளிநொச்சியில் இருந்து
வந்து காதலன் வீட்டில் தங்கியிருந்த காதலி சாவகச்சேரியில் உள்ள காதலன்
வீட்டில் வைத்து நேற்று இரவு கைதுசெய்யப்பட்டார்.
நகையை திருடிய காதலி கைது
அவரிடம் மேற்கொண்ட
விசாரணையில் தாலிக்கொடியினை சாவகச்சேரியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில்
அடைவுவைத்ததாகவும் மீதி நகைகளை யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ரிக்ரொக் சமுக வலைத்தளத்தில் உள்ள நண்பர் ஒருவரின் உதவியுடன் இணைய முதலீட்டு
வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் இதுவரையில் 27 இலட்சம் ரூபா
செலுத்தியுள்ளதாகவும் மேலதிக பணம் செலுத்துவதற்காக காதலன் வீட்டில் திருடியதாக
விசாரணையில் குறித்த யுவதி தெரிவித்துள்ளார்.
காவல்துறையின் அறிவிப்பு
இதேபோன்று அண்மைய
நாட்களில் வேறு சில சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பாக இளம் யுவதி
ஒருவர் தனது நகையை விற்பனை செய்து இணைய முதலீட்டு வியாபாரத்தில் ஈடுபட்டதுடன்
நகை திருட்டு போயுள்ளதாக பொய் முறைப்பாட்டை பதிவுசெய்துள்ளார்.

எனவே பொதுமக்கள்
குறிப்பாக இளைஞர், யுவதிகள் மிக அவதானமாக இருக்குமாறு சாவகச்சேரி காவல்துறையினர்
அறிவுறுத்தியுள்ளனர்.

