யாழ்ப்பாணம் சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட சபாபதிப்பிள்ளை வீதி,
சுன்னாகம் பகுதியில் இன்றையதினம்(26) 100 போதை மாத்திரைகளுடன் யுவதி ஒருவர் கைது
செய்யப்பட்டுள்ளார்.
சுன்னாகம் காவல்துறையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது இந்த கைது
நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை
அவரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில்
முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


