மலையக பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக நேற்று (27) நுவரெலியா நகரத்தின்
பல பகுதிகள் நீரில் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
நுவரெலியா புத்த மந்திர மாவத்தை, நுவரெலியா பஸ் நிலையம், ஹவாஎலியா வைத்தியசாலை
மாவத்தை உள்ளிட்ட பல முக்கிய வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்ததால்,
பொதுமக்கள் அசௌகரியத்துக்குள்ளாகியுள்ளனர்.

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் மண்சரிவு
இதற்கிடையில், தலவாக்கலை சென்.கிளயார் தோட்டப் பகுதியில் ஹட்டன்–நுவரெலியா
பிரதான வீதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, அந்தச் வீதியின் போக்குவரத்து ஒரு வழி
போக்குவரத்தாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
கனமழை தொடர்ந்து பெய்யக்கூடும் என வானிலைவியல் திணைக்களம் எச்சரிக்கை
விடுத்துள்ளமை
குறிப்பிடதக்கது.


