யாழில் உள்ள ஆலயம் ஒன்றின் மடப்பள்ளியில் முதியவர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (27) இடம்பெற்றுள்ளது.
அளவெட்டி – கணேஷ்வரம் பகுதியைச் சேர்ந்த
சுந்தரம்பிள்ளை ஈஸ்வரன் (வயது 69) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குருக்கள் கிணற்றடி விநாயகர் ஆலய மடப்பள்ளியில் தவாறான முடிவெடுத்து அவர் உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த சில நாட்களாக தான் உயிர்மாய்க்க போவதாக தெரிவித்து கயிறு ஒன்றை தன்னுடன்
வைத்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம்
மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

