முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திருகோணமலையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பில் அரசாங்க அதிபரின் தகவல்

​கடந்த ஐந்து தினங்களுக்கு மேலாக திருகோணமலை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை
மற்றும் கடும் காற்று காரணமாக மாவட்டத்தின் 11 பிரதேச செயலக பிரிவுகளிலும்
மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நவம்பர் 25 தொடக்கம் 28 ஆம் திகதி காலை 8 மணி வரையுமான காலப்பகுதிக்குள்
பிரிவுகளில் 3844 குடும்பங்களைச் சேர்ந்த, 11350 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் W. H. G. M.
ஹேமந்தகுமார தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் 

அதிக பாதிப்புக்குள்ளான பிரதேசங்கள், 

கிண்ணியா: 1600 குடும்பங்கள் – 3800 பேர்

குச்சவெளி : 870 குடும்பங்கள்- 2880 பேர்

மூதூர்: 750 குடும்பங்கள் – 2485

பேர்
​தம்பலாகமம்: 188 குடும்பங்கள் – 561 பேர்

கந்தளாய் : 151 குடும்பங்கள் – 630

பேர்
​சேருவில: 105 குடும்பங்கள் – 401

பேர்
​பதவிசிறிபுர: 40 குடும்பங்கள் – 123 பேர்

திருகோணமலையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பில் அரசாங்க அதிபரின் தகவல் | People Affected By Floods In Trincomalee

பட்டணமும் சூழலும்: 85 குடும்பங்கள் – 299 பேர்

மொரவெவ: 34 குடும்பங்கள் – 99 பேர்

கோமரங்கடவெல: 5 குடும்பங்கள் – 22 பேர்

வெருகல்: 15 குடும்பங்கள் – 40 பேர்

இவர்களில், 3515 குடும்பங்களை சேர்ந்த 9683 பேர் உறவினர் வீடுகளில் தஞ்சம்
அடைந்துள்ளனர்.

மேலும் இடை தங்கல் முகாம்களில் 24 குடும்பங்களைச் சேர்ந்த 589 பேர்
தங்கியுள்ளனர்.

​தம்பலாகமம் பிரதேசத்தைச் சேர்ந்த 64 பேர் ஆதி கோணேஸ்வரா வித்தியாலயத்திலும்,
கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த 515 பேர் பாரதிபுரம் வித்யாலயத்திலும், 95 பேர்
அல் ரவுல்லா வித்தியாலயத்திலும், குச்சவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 10 பேர்
கமாஸ் நகர் முன்பள்ளியிலும், தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

​கனமழை மற்றும் கடும் காற்று காரணமாக மாவட்டத்தில் மொத்தமாக 95 வீடுகள்
சேதமடைந்துள்ளன.

பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கத்தின் நிவாரணங்களை உடனடியாக வழங்குவதற்கு
நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதோடு, மக்களின் பாதுகாப்பு குறித்தும் அதிக
கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

திருகோணமலையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பில் அரசாங்க அதிபரின் தகவல் | People Affected By Floods In Trincomalee

பாதிக்கப்பட்டவர்களுக்கு சமைத்த உணவுகள் மற்றும் உலர் உணவுப் பொருட்களை
வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

​முக்கிய எச்சரிக்கைகள் மற்றும் பொதுச் சேதங்கள் –

​மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவிக்கையில்,
​ நீர் வடிந்து ஓடக்கூடிய வசதிகளை உடனடியாக ஏற்படுத்திக் கொடுக்குமாறு
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் வீதிகள், கடற்கரைப் பூங்காக்கள், பாலங்கள், கால்வாய்கள் போன்ற
பொது உட்கட்டமைப்புகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர் அறிவித்தார்.

​கடற்கரை ஓரமாக வசிப்பவர்கள் அவதானமாக இருப்பதோடு, தங்களின் பாதுகாப்புக்காக
இரவு நேரங்களில் உறவினர்களின் வீடுகளில் தங்கிச் செல்லுமாறு
அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கந்தளாய் வான் கதவு திறக்கப்படும் அபாயம் இருப்பதனால், கிண்ணியா கந்தளாய்,
தம்பலகாமம் ஆகிய பிரதேச மக்கள் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

இவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்கு முன்னெச்சரிக்கை
நடவடிக்கையாக முப்படையினர் உசார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர் என்றும்
தெரிவித்தார்.

அரசாங்கத்தின் நிவாரண மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து
முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான முயற்சிகள்
துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் W. H. G. M. ஹேமந்தகுமார
தெரிவித்தார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.