நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பகுதிகள் முழுமையாக
பாதிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் யாழ் வடமராட்சி கிழக்கு புன்னையடி பகுதியில்
கால்நடைகள் இறந்து இருப்பதை காணக்கூடியதாக உள்ளது.
இறந்து இருக்கும் கால்நடைகளை அகற்றும் பணிகளை உடனடியாக பருத்தித்துறை பிரதேச
சபை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி – பூ.லின்ரன்
யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதியில் வீசிய புயல்காற்றினால் பல
படகுகள் பாறைகளில் மோதி சேதமடைந்துள்ளதுடன் பலரது வலைகள் மற்றும் கடற்றொழில்
உபகரணங்களும் கடலிற்குள் இழுத்துச்செல்லப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மீனவர்கள் தமது படகுகளை மீட்டெடுப்பதில் காணாமல் போன வலைகள் மற்றும் கடற்றொழில் உபகரணங்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
செய்தி – காண்டீபன்



