மெல்சிரிபுரவின் கந்துமல்ல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் மூன்று மாதக் குழந்தை உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரழிவைத் தொடர்ந்து ஒன்பது பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (29) மாலை மேலும் பல பகுதிகள் மண்ரிவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணி
தொடர்ந்து நிலவும் பாதகமான வானிலை, நிவாரணப் பணிகளுக்கு இடையூறாக உள்ளது.

இதனால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்வது குழுக்களுக்கு சவாலாக உள்ளது.
இந்தப் பகுதியில் சுமார் 10 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

