நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக மூடப்பட்டிருந்த 159 பிரதான வீதிகள் மீண்டும் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளன.
வீதி அபிவிருத்தி அதிகாரசபை இதனை அறிவித்துள்ளது.
இதற்கமைய, திறக்கப்பட்ட முக்கிய வீதிகள்,
A-004: கொழும்பு – இரத்தினபுரி – வெல்லவாய – மட்டக்களப்பு வீதி
A-026: கண்டி – மகியங்கனை – பதியதலாவ வீதி
AA 006: அம்பேபுஸ்ஸ – குருநாகல் – திருகோணமலை வீதி
AA 010: கட்டுகஸ்தோட்டை – குருநாகல் – புத்தளம் வீதி
AA 003: பேலியகொட – புத்தளம் வீதி உள்ளிட்ட பல பிரதான வீதிகள் இதில் அடங்குகின்றன.
தற்போது மூடப்பட்டுள்ள ஏனைய வீதிகளையும் விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


