டித்வா சூறாவளியால் ஏற்பட்ட வீதித் தடைகள் காரணமாக இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) கிட்டத்தட்ட 1,500 பேருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
முன்பதிவு செய்த சுமார் 15,000 பயணிகள் மேலதிக கட்டணம் இல்லாமல் எந்த விருப்பமான திகதிக்கும் தங்கள் முன்பதிவுகளை மீண்டும் திட்டமிடலாம்.
தொடர்பு கொள்வதற்கான வழி
பயணிகள் SLTB-ஐ 1315 அல்லது 070 3110 506 என்ற கொட்லைன் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

நுவர எலியா, நாவலப்பிட்டி, வழித்தடம் 87 யாழ்ப்பாணம், வலப்பனை, மூதூர் மற்றும் பிபில ஆகியவற்றுக்கான பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன, அதே நேரத்தில் பிற இடங்களுக்கான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

