இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய மீன் பிடித்தலை எதிர்த்து எதிர்வரும் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் கடற்றொழிலாளர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்.
இது தொடர்பாக வடமராட்சி கிழக்கு தொடக்கம் நெடுந்தீவு வரையான கடற்றொழில் சங்க பிரதிநிதிகள் இன்று (08) காலை 10:30 மணியளவில் யாழ்ப்பாணம் மாவட்ட நீரியல்வளத் திணைக்கள
உதவிப் பணிப்பாளர் கிறிஸ்ணன் அகிலனை சந்தித்து கலந்துரையாடினர்.
இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய மீன்பிடி
இதன்போது இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய மீன்பிடி யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்களின்
வாழ்வாதாரம் முற்றிலுமாக இழக்கப்பட்டுள்ளதாகவும் அண்மை நாட்களாக நாகபட்டினம் – காரைக்கால்
கடற்றொழிலாளர்களின் இழுவைப்படகுகள் கரையை அண்மித்து மீன்பிடியில் ஈடுபட்டு
வருவதாகவும் இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

கடலில் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்த
வண்ணம் உள்ளது. இதனை அரசாங்கமாக நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும் தவறின்
நாங்கள் கடலில் இறங்கிப் போராட வேண்டிய நிலை ஏற்படும்.
அடையாள போராட்டம்
ஆனாலும் அடையாளமாக எதிர்வரும் வெள்ளிக் கிழமை யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்கள்
ஒன்றிணைந்து நீரியல்வளத் திணைக்களத்தின் முன்னிருந்து போராட்டம் ஒன்றை
ஆரம்பித்து மாவட்டச் செயலகம் வரை செல்லவுள்ளோம். மாவட்டச் செயலகத்தை முடுக்கி
எமது போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் என தெரிவித்தனர்.


