இந்திய கடற்றொழிலாளர்களின் சட்டவிரோத அத்துமீறலை கட்டுப்படுத்தக் கோரி இன்று(12) யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
இன்று காலை யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்கள் ஒன்றினைந்து முன்னெடுத்த குறித்த போராட்டம்
பண்ணை பகுதியில் உள்ள கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அலுவலகத்தின்
முன்னால் இருந்து பேரணியாக ஆரம்பமாகி மாவட்ட செயலகம் வரை சென்றடைந்தது.
யாழில் போராட்டம்
இதன்போது யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது.

அத்தோடு இந்திய துணைத் தூதரம், வடக்கு மாகாண ஆளுநர், கடற்றொழில் நீரியல்
வளத்துறை திணைக்களம் ஆதியவற்றிலும் கடற்றொழிலாளர்களால் மனு கையளிக்கப்பட்டது.









