கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளால் இன்று (14) கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதன்போது குறித்த நபரிடமிருந்து 2 கிலோ 300 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீதிமன்றத்தில் முன்னிலை
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ரம்புக்கனை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞன் மலேசியாவிலிருந்து நாட்டிற்கு வந்த ஒருவர் என குறிப்பிடப்படுகின்றது.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்றையதினம் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
அத்துடன் சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

