நாட்டின் ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் (NBRI) வெளியிட்டுள்ள சிவப்பு மண்சரிவு எச்சரிக்கைகள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மண்சரிவு அபாயம்
அதன்படி, பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் தொடர்ந்து நீடிக்கின்றது.

இதேவேளை, நாட்டில் நாளை,நாளை மறுநாள் முதல் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

