கிளிநொச்சி மாவட்டத்தின் இவ்வாண்டுக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று(17.12.2025) கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதன்போது வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகம் மற்றும் கடற்றொழில் அமைச்சர்
இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், ரஜீவன், இளங்குமரன் மற்றும் அரச சார்பற்ற திணைக்களங்களின் அதிகாரிகள், பொது
அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் குறித்த ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தின் போது அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டது.






