மட்டக்களப்பு காத்தான்குடியில் சிகை அலங்கார நிலையத்தில் சிகை அலங்காரத்தில் ஈடுபட்டுக்
கொண்டிருந்த இளைஞர் மீது இன்று கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இளைஞன் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலை நடத்திய இளைஞன் அங்கிருந்து தப்பி ஓடி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்தனர்.
இளைஞர்களுக்கு இடையேயான முரண்பாடு
இந்த கத்தி குத்து தாக்குதலில் ஹைராத் நகரைச் சேர்ந்த அஸி அஸ்பாக (வயது 25) என்ற
இளைஞனே படுகாயமடைந்துள்ளார்.

கத்தி
குத்துக்கு இலக்கான இளைஞனுக்கும் கத்தியால் குத்திய இளைஞனுக்கும் இடையே ஒரு
சில தினங்களாக வாய்த்தர்க்கம் மற்றும் கை கலப்பு இடம் பெற்று வந்த பின்னணியில் இந்த
கத்தி குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணையில்
தெரியவந்துள்ளது
தடயவியல் பிரிவு
சம்பவ இடத்திற்கு தடயவியல் பிரிவு வரவழைக்கப்பட்டு
விசாரணைகளை மேற்கொண்டதுடன் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்

