யாழில் சுவர் இடிந்து விழுந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்த
சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(19.12.2025) இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு – விசுவமடுவைச்
சேர்ந்த 17 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பு
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த சிறுவன் குடும்ப வறுமை காரணமாக வேலைக்கு வந்து, நேற்றையதினம் குருநகர்
– பாஷையூரில் பழைய வீட்டினை இடித்துக் கொண்டிருந்தார்.

இதன்போது, ஒரு பக்க சுவரினை
இடித்துவிட்டு அந்த சுவர் விழப்போகின்றது என அறையின் உள்ளே ஓடினார்.
இதனையடுத்து, மற்றைய சுவர் அவர் மீது விழுந்ததில் சம்பவம் நடந்த இடத்திலேயே
உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை
அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

