பாரிய மண்சரிவுக்குள்ளான பகுதிகளைச் சுற்றியுள்ள பாதுகாப்பற்ற மற்றும் வெடிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளைக் கண்காணிக்க வெளிநாட்டு புவியியலாளர்கள் அடங்கிய மூன்று குழுக்கள் வந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இத்தாலி, பிரான்ஸ் மற்றும் சீனாவிலிருந்து இந்தப் புவியியலாளர்கள் குழுக்கள் நாட்டிக்கு வந்துள்ளதாக அவர் கூறினார்.
அதன்படி, நிலச்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகளான வெடிப்பு மற்றும் விரிசல் அடைந்த பகுதிகளை அடையாளம் காண ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முதற்கட்ட ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேற்கொள்ளப்படவுள்ள ஆய்வுகள்
தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு உள்ளிட்ட உள்ளூர் நிபுணர்களின் உதவியுடன் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வெடிப்பு மற்றும் விரிசல் அடைந்த மலைகள்,தாழ் நிலங்களில் ஏற்படும் சேதத்தைக் குறைக்கப் பொறியியல் முறைகளைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை இந்த ஆய்வுகளில் ஆராயப்படவுள்ளன.

கண்டி, மாத்தளை, பதுளை, நுவரெலியா, குருநாகல் மற்றும் சபரகமுவ மாகாணங்களில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் அதன் அச்சுறுத்தல், பாரிய நிலச்சரிவுகள் ஏற்பட்ட பகுதிகள் வெளிநாட்டு நிபுணர்களின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும்.

