முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சங்குச் சின்னத்துக்கு வாக்களித்து ஓங்கி ஒலிப்போம்: ஐங்கரநேசன் வலியுறுத்து

தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு பின்னர்  எஞ்சியிருக்கும் ஒரேயொரு ஆயுதம் வாக்குகள்தான் என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் பின்னரான கடந்த மூன்று ஜனாதிபதித் தேர்தல்களிலும் இந்த வாக்குப்
பலத்தை நாம் வீணடித்துவிட்டோம் என்றும், இம்முறையாவது அவற்றை இலக்குத் தவறாது பிரயோகிப்போம் எனவும்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்ப் பொதுவேட்பாளர் பா. அரியநேத்திரனை ஆதரித்து நேற்று ஞாயிற்றுக்கழமை
(08.09.2024) ஏழாலை ஐக்கிய நாணயசங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில்
உரையாற்றியபோதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யுத்தத்தின் பின்னர் தமிழினம்

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

சங்குச் சின்னத்துக்கு வாக்களித்து ஓங்கி ஒலிப்போம்: ஐங்கரநேசன் வலியுறுத்து | A Request To Vote For Ariyanethiran

முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னர் தமிழினம் அரசியல் ரீதியாக மிகமோசமாகப்
பலவீனம் அடைந்துள்ளது.

இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி ஸ்ரீலங்கா அரசு தமிழர்
தாயகத்தை வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், தொல்லியல் திணைக்களம்
என்பவற்றின் ஊடாகச் சட்டரீதியாகக் கையகப்படுத்தி வருகின்றது.

தமிழர்
தாயகத்தின் இயற்கை வளங்களை, பொருளாதாரத்தை, பண்பாட்டைத் திட்டமிட்டுச்
சிதைத்து வருகின்றது.

இவற்றின் மூலம் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பைக் கனகச்சிதமாக நிறைவேற்றி வருகிறது.

தென்னிலங்கைத் தலைவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினையை வெறுமனே பொருளாதாரப்
பிரச்சினையாக மாத்திரமே உலகுக்குக் காட்டி வருகின்றார்கள்.

இந்நிலையில், இலங்கைத் தீவில் இன்று ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடிக்குத் தமிழ்
மக்கள் மீது தொடுத்த யுத்தமே மூலகாரணம் ஆகும்” என்றார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.