புற்று நோயினால் பாதிக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அதன்போது, யாழ்ப்பாணம் – பருத்தித்துறையை சேர்ந்த 37 வயதான ஒரு பிள்ளையின் தாயே உயிரிழந்துள்ளார்.
திருகோணமலையை சொந்த இடமாக கொண்ட குறித்த ஆசிரியர் யாழ்.இளைஞர் ஒருவரை திருமணம் செய்து மூன்று வயது குழந்தையும் உள்ளதாக கூறப்படுகின்றது.
உயிரிழப்பு
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில், குறித்த ஆசிரியை இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

