யாழில் (Jaffna) திருமணமாகி 20 நாட்களே நிறைவடைந்த நிலையில் இளம் பெண் ஆசிரியை ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று முன் (06) இடம்பெற்றுள்ளதுடன் தம்புவத்தை ஏழாலை மேற்கு பகுதியில் வசித்து வந்த 28 வயதுடைய சபேஸ் பிரவீனா என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த ஆசிரியை நுவரெலியா (Nuwara Eliya) மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதுடன் வட்டவல குயில்வத்தை மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றி வந்த நிலையில் யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துள்ளார்.
விசாரணை அதிகாரி
இதனடிப்படையில், கடந்த மாதம் 24 ஆம் திகதி திடீரென அவருக்கு சுகயீனம் ஏற்பட்டுள்ள நிலையில் இதையடுத்து அவரை வைத்தியசாலையில் அனுமதித்த வேளை எலும்பில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து நேற்றையதினம் (06) அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலும்,சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் நேற்றையதினம் (07) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Source: https://ibctamil.com/article/a-young-female-teacher-was-killed-in-jaffna-1720381762

