யாழ்ப்பாணம்- செம்மணி சந்தியில் மோட்டார் சைக்கிளும், பட்டா ரக வாகனமும் மோதி
விபத்து சம்பவித்துள்ளது.
குறித்த விபத்தானது இன்று (14) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸார் விசாரணை
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த விபத்து சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.

