சினிமா துறை நடிகர்கள் சொந்த வாழ்க்கை பற்றிய செய்தி என்றால் பெரிய அளவில் வைரல் ஆகும். பிரபல ஹிந்தி நடிகர் ஓம் பூரி பற்றி அவரது முன்னாள் மனைவி சீமா கபூர் அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
வேலைக்காரி உடன் தொடர்பு
சீமா கபூர் உடன் பல வருடங்களாக காதலில் இருந்த ஓம்புரி 1990ல் அவரை திருமணம் செய்திருக்கிறார். திருமணத்திற்கு முந்தைய நாள் அவரை அழைத்து தான் ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என கூறி இருக்கிறார்.
தனக்கு வீட்டின் வேலைக்காரி உடன் தொடர்பு இருக்கிறது என கூறி இருக்கிறார். திருமண பத்திரிக்கை உறவினர்கள் எல்லோருக்கும் அனுப்பியாகிவிட்டார், கடைசி நொடியில் திருமணத்தை நிறுத்த என்க்கு தைரியம் இல்லை, அதனால் திருமணம் செய்துகொண்டேன்.
அடுத்த தொடர்பு
திருமணம் ஆகி சில மாதங்கள் கழித்து ஓம்புரி பத்திரிகையாளர் நந்திதா என்பவரை சந்தித்த நிலையில், அவருடனும் கள்ளத்தொடர்பு அவருக்கு ஏற்பட்டு இருக்கிறது.
மனைவி சீமா கபூர் கர்ப்பமாக இருந்த நேரத்தில் அவர் இப்படி செய்திருக்கிறார். அது பற்றி சீமா கபூர் கேட்டு சண்டைபோட ஓம்புரி மற்றொரு சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.
சீமா கபூருக்கு வேறொரு நபர் உடன் தொடர்பு இருக்கிறது, அவர் வயிற்றில் இருக்கும் குழந்தை தன்னுடையது அல்ல எனவும் கூறினார்.
அதன் பிறகு சட்டப்போராட்டம் நடத்தி ஓம்புரியிடம் இருந்து விவாகரத்து பெற்று, அவரிடம் இருந்து 6 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் பெற்றிருக்கிறார்.
அவரது அடுத்த மனைவி நந்திதா உடனும் ஓம் பூரி 2013 வரை தான் வாழ்ந்தார். ஓம் பூரி பற்றிய உண்மைகளை புத்தகத்தில் எழுதி வெளியிட்டதனால் அவர் கடும் கோபமாக நந்திதாவை கொடுமை படுத்த தொடங்கிவிட்டார்.
அதனால் 2013ல் சட்டப்படி விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.