சுப்பிரமணி
தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள், பிசாசு, ரஜினி முருகன், ஜெய் பீம், வானம் கொட்டட்டும் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சூப்பர் குட் சுப்ரமணி.
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக சினிமாவில் இருந்தார், சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்ததால் இவரை சூப்பர் குட் சுப்பிரமணி என்று அழைக்கப்பட்டார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நடிகர் சுப்பிரமணிக்கு புற்றுநோய் பாதிப்பில் 4-வது கட்டம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சுப்பிரமணி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார், அவருக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

