வரலட்சுமி சரத்குமார்
சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்தவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். சிம்புவுடன் போடா போடி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.
அதன்பின் தாரை தப்பட்டை, சர்கார், விக்ரம் வேதா, சத்யா, சண்டக்கோழி 2 என தொடர்ந்து தமிழில் நடித்தவர் தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து வந்தார். கடந்த ஆண்டு தனது காதலர் நிக்கோலாய் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின் பெரிதாக படங்களில் நடிக்காமல் இருந்த வரலட்சுமி தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பாப்புலர் ஷோவான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக வலம் வருகிறார்.
அதிகப்படியான உயரம், அதற்கு தயாராக இருக்கிறேன்.. நடிகை குஷ்பூ மகள் வருத்தம்
ரகசியம்
இந்நிலையில், தன் கணவர் குறித்து அவர் பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், “என்னால் என் கணவரை வைத்து கொண்டு முடியவில்லை.
எதற்கெடுத்தாலும் என் அப்பா அல்லது அம்மாவுக்கு வாய்ஸ் நோட்டில் செய்து என் மீது சிறு குழந்தை போன்று கம்ப்ளைண்ட் செய்து கொண்டிருக்கிறார். அவர்களும் என் கணவருக்கு சப்போர்ட் செய்கின்றனர்” என க்யூட்டாக கமெண்ட் செய்கின்றனர்.