வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) இந்த வாரம் ருமேனியா மற்றும் போலந்திற்கு நான்கு நாள் விஜயத்தில் ஈடுபடவுள்ளார்.
வெளியுறவு அமைச்சின் கூற்றுப்படி, அமைச்சர் ஜூலை 16 முதல் 19 வரை இரு நாடுகளுக்கும் விஜயம் செய்யவுள்ளார்.
இலங்கைத் தூதரகம்
இந்த விஜயத்தின் போது அந்நாடுகளின் அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகளை சந்திக்கவுள்ளார்.
2023 இலிருந்து செயல்படத் தொடங்கிய புக்கரெஸ்டில் (Bucharest) புதிய இலங்கைத் தூதரகத்தையும் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கவுள்ளார்.