பசறை (Passara) – லுணுகலை பகுதியில் சிறுமி ஒருவரை தவறானமுறைக்குட்படுத்திய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் தவறானமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்ட்டுள்ளார்.

சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், குறித்த சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லுணுகலை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Source: https://ibctamil.com/article/arrest-of-person-inducting-girl-in-law-1720875093

