மாரி செல்வராஜ்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் மாரி செல்வராஜ். இவர் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் போன்ற படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் பிரபலமானார்.
இதை தொடர்ந்து கடந்த ஆண்டு இவர் இயக்கத்தில் வெளிவந்த படம் வாழை. இவரது வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து இப்படம் எடுக்கப்பட்டதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.
இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா மற்றும் நிமிஷா சஜயன் நடித்துள்ள ”டிஎன்ஏ” படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக மாரி செல்வராஜ் கலந்து கொண்டார். அப்போது மாரி, அதர்வா குறித்து பகிர்ந்த விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.


நயன்தாராவின் பவுன்சர்களுக்கு மட்டும் இத்தனை லட்சம் சம்பளமா?.. அடேங்கப்பா!
யார் தெரியுமா?
அதில், ” அதர்வாவுக்கு இது நியாபகம் உள்ளதா என்று தெரியவில்லை. ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் ஸ்கிரிப்டை நான் முதலில் அதர்வாக்கு தான் சொன்னேன்.
ஆனால், அப்போது அவரது பிஸியான ஷெட்யூல் காரணமாக, இந்த படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை. அதர்வா இந்தப் படத்தில் நடிக்கமாட்டார் என்று தெரிந்ததும் நான் மிகவும் வருத்தப்பட்டேன்” என்று பேசியுள்ளார்.


