அய்யனார் துணை
கடந்த ஜனவரி 27ம் தேதி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தான் அய்யனார் துணை.
நிலா என்ற பெண்ணை சுற்றிய கதையாக இந்த தொடர் ஆரம்பமானது. தற்போது அவர் சோழனின் குடும்பத்தில் ஒருவராக மாறி அவர்களுக்காக நிறைய விஷயங்கள் செய்து வருகிறார்.
இப்போது கதையில் கார்த்திகாவிற்கு யாருடன் திருமணம் நடக்கப்போகிறது என்ற பரபரப்பான கதைக்களம் தான் செல்கிறது.

அடுத்த வாரம்
இன்றைய எபிசோடில், கார்த்திகா-சேரன் இருவரும் ஒன்று சேர முடியாததால் கவலையில் இருக்கின்றனர். கார்த்திகா திடீரென சேரன் வீட்டிற்கு வந்து அவர் இல்லாமல் என்னால் இருக்க முடியாது, நான் வீட்டிற்கு போக மாட்டேன் என கதறுகிறார்.

அப்படியே எபிசோட் முடிய, அடுத்த வார புரொமோவில், கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட செல்கிறார் சேரன்.
அந்த நேரத்தில் திடீரென கார்த்திகாவின் அப்பா என்ட்ரி கொடுக்கிறார். அடுத்த வாரம் இந்த கதைக்களத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து காண்போம்.
View this post on Instagram

