பாக்கியலட்சுமி
பாக்கியலட்சமி, விஜய் தொலைக்காட்சியில் டிஆர்பியில் செம மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு தொடர்.
இல்லத்தரசிகளின் கஷ்டத்தை காட்டும் வகையில் ஒளிபரப்பான இந்த தொடர் இப்போது பரபரப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கதையில் பாக்கியாவின் இரண்டு ரெஸ்டாரன்டையும் சூழ்ச்சி செய்து வாங்கிவிட்டார் சுதாகர்.
அவர் தான் இப்படி செய்தார் என பாக்கியா எவ்வளவு கூறியும் அவரது வீட்டில் யாரும் நம்பவில்லை.

புரொமோ
இன்றைய எபிசோடில் நான் தான் ஏமாற்றினேன் என சம்பந்தியம்மா கூறுகிறார், நான் அப்படி ஒன்றும் செய்யவில்லை.
வேண்டுமென்றால் நான் பணம் தந்துவிடுகிறேன் என கூற பாக்கியா யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் பணம் வாங்குவதாக கூறி செக் வைக்கிறார். மொத்தம் ரூ. 60 லட்சம் வேண்டும் என கூறுகிறார்.

