நாளை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான யாழ்ப்பாணம் மாவட்ட
வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்கு பெட்டிகள் எடுத்து
செல்லப்பட்டுள்ன.
இன்று காலை 8 மணியளவில் வாக்குப் பெட்டிகளை அனுப்பும் நிலையமான யாழ்ப்பாணம்
மத்திய கல்லூரியில் இருந்து யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம்
பிரதீபனால் குறித்த நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி மன்றங்களில் , 517 வாக்களிப்பு
நிலையங்களுக்கு 672 வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
https://www.youtube.com/embed/7vSGnTqEMEw

