பல மாதங்களாக அமெரிக்காவில்(us) இருந்த சிறிலங்கா பொதுஜன பெரமுனவின்(slpp) முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச(basil rajapaksa) இலங்கைக்குத் (sri lanka)திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, அவர் வரும் வியாழக்கிழமை நாட்டிற்கு வருவார் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மீண்டும் அரசியல் நடவடிக்கைகளைத் தொடங்குவாரா
அமெரிக்க பிரஜையான அவர் கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு,அந்த நாட்டுக்கு சென்றிருந்தார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் இலங்கை திரும்பவுள்ளார்.நாடு திரும்பிய பிறகு அவர் மீண்டும் அரசியல் நடவடிக்கைகளைத் தொடங்குவாரா இல்லையா என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

