மட்டக்களப்பு மாநகர சபையினரால் அனர்த்தத்திற்காக நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் இந்த வேளை இதற்கு மேலும் வலுசேர்க்கும் முகமாக மாநகர சபையின் உறுப்பினர்கள் 38, பேரும் எந்தவித கட்சி அரசியல் வேறுபாடுகளும் இன்றி டிசம்பர் மாதத்திற்கான அவர்களது கொடுப்பனவுத் தொகையை வழங்கியுள்ளனர்
இதனால் மொத்தமாக ஐந்து இலட்சத்து எழுபத்தி ஐந்தாயிரம் ரூபாவை(575000) வழங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரணப் பொருட்களை வாங்குவதற்காக அந்த பணத்தை தம்மிடம் வழங்கி இருக்கின்றார்கள் என மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தெரிவித்தார்.
மக்கள் பாராட்டு
அனர்த்தங்கள் ஏற்பட்டால் கட்சிகள் வேறுபாடுகள் மறந்து மனிதாபிமானமே முன்னிலை பெறும் என்பதனை செய்கையில் காட்டிய மட்டக்களப்பு மாநகரசபையின் 38, உறுப்பினர்களுக்கும் மக்கள் தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.


