பிரியங்கா தேஷ்பாண்டே
விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ தொகுப்பாளினிகள் கலக்கி வருகிறார்கள்.
டிடி, பாவனா, ரம்யா, திவ்யா, பிரியங்கா, ஜாக்குலின், அர்ச்சனா என நிறைய பேரை சொல்லிக்கொண்டே போகலாம்.
தற்போது ஒரு பிரபல தொகுப்பாளினிக்கு திருமணம் நடந்துள்ளது.
அவர் வேறுயாரும் இல்லை பிரியங்கா தேஷ்பாண்டேவிற்கு தான். பிரவீன் என்பவரை திருமணம் செய்த பிரியங்கா சில காரணங்களால் அவரை பிரிய தனது அம்மாவுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் திடீரென அதாவது கடந்த ஏப்ரல் 16ம் தேதி வசி என்பவரை திருமணம் செய்தார். அந்த புகைப்படங்கள் வெளியாக ரசிகர்களும் வாழ்த்து கூறி வந்தனர்.
வாழ்த்து
பிரியங்காவிற்கு பலரும் வாழ்த்து கூறி வர அவரது நண்பரும், பிக்பாஸ் பிரபலமுமான நிரூப் தனது இன்ஸ்டாவில் தனது தோழி திருமணத்திற்கு ஒரு பதிவு போட்டுள்ளார். அதில் அவர், நீ பல விஷயங்களைக் கடந்து வந்தப்பிறகு, உன்னை நேசிக்கக்கூடிய ஒரு காதலுக்குள் நீ நுழைகிறாய்.
அதனைப் பார்க்கும்போது நீண்ட இரவுக்குப் பிறகு உதயமான சூரியனைப் பார்க்கும் மாதிரியான உணர்வு இருக்கிறது.
உன்னை காதலிக்கும் நபரை மட்டும் கண்டுப்பிடிக்காமல் உன்னை புரிந்துகொள்ளும், மதிக்கும், கூடவே நீ சொல்லும் மோசமான நகைச்சுவைக்கும் சிரிக்கும் ஒருவரைக் கண்டுபிடித்திருக்கிறாய் என வாழ்த்து கூறியுள்ளார்.
View this post on Instagram