யுத்தத்தில் உயிர் இழந்தவர்களை நினைவு கூறுவதில் எந்த தடையும் இல்லை என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று (22.11.2025) நடந்த ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“யுத்தத்தில் உயிரிழந்த
மக்களுக்கு அஞ்சலி செலுத்துவது அவர்களின் ஜனநாயக உரிமை. அரசாங்கள் வர முன்பே மக்கள்
இறந்தவர்களை நினைவு கூர்ந்தனர்.
சுதந்திரமாக நினைவு கூர முடியும்
அது அவர்களின் ஜனநாயக உரிமையாகவே
காணப்பட்டது. எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகின்றது.

மக்கள், இறந்த
தங்களுடைய உறவினர்களை சுதந்திரமாக நினைவு கூர முடியும். பாதுகாப்பு படையினரும்
அதற்கு தடையாக இருக்கமாட்டார்கள்” எனத் தெரிவித்துள்ளனர்.

