பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் (Rishi Sunak) பாதுகாவலர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரிஷி சுனக்கின் பாதுகாவலர்களில் ஒருவரான கிரேக் வில்லியம்ஸ் (Craig Williams) என்பவரே தவறான நடத்தைக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
பணியிடை நீக்கம்
குறித்த அதிகாரி பிரதமர் ரிஷி தேர்தல் திகதியை அறிவிப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, தேர்தல் எந்த நாளில் நடைபெறும் என தேர்தல் திகதி குறித்து 100 பவுண்ஸ் பந்தயம் கட்டியுள்ளார்.
இந்த தகவல் சம்பந்தப்பட்ட துறைக்கு தெரியவந்ததைத் தொடர்ந்து, விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட்டு, வில்லியம் குறித்து காவல்நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளார என்பது குறிப்பிடத்தக்கது.