ஸ்பெயினின் – இபிஸா தீவில் பிரித்தானிய (United Kingdom) இளம்பெண்கள் இருவர் விபத்தில் சிக்கியதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (26.08.2025) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவைச் சேர்ந்த 26, 27 வயது பெண்கள் இருவர் ஸ்பெயினின் இபிஸா (Ibiza) தீவுக்கு சுற்றுலாவுக்கு சென்றுள்ளனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவு
துரதிர்ஷ்டவசமாக, வாகனம் ஒன்று மோதியதில் இருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்கள் இருவருக்கும் மூளையில் காயங்கள் மற்றும் எலும்பு முறிவுகள் ஏற்பட்டதால், அவர்களது நிலைமை மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது.
முதற்கட்ட விசாரணையில் 24 வயது நபர் ஒருவர் இயக்கிய வாகனத்தால் அப்பெண்கள் விபத்தில் சிக்கியதாக தெரிய வந்துள்ளது.
குறித்த நபருக்கு போதைப்பொருள் பரிசோதனை செய்யப்பட்டதா என்பது உடனடியாகத் தெரியவில்லை.

