தமிழரசு கட்சியின் தலைவர் சி.விகே.சிவஞானமும், ஜனநாயக
தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளி கட்சியான சமத்துவக் கட்சியின் பொதுச்
செயலாளருமான மு.சந்திரகுமாரும் சந்தித்து
கலந்துரையாடியுள்ளனர்.
குறித்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் கிளிநொச்சியில்
அமைந்துளள சமத்துவக் கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
கலந்துரையாடப்பட்ட விடயம்
அரசியல் நிலைமைகள், எதிர்கால செயற்பாடுகள், புதிதாக உருவாக்கப்படவுள்ள
பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் தமிழ் மக்களின் தரப்பாக எவ்வாறு
செயற்படுவது போன்ற பல்வேறு விடயங்கள் பற்றி இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இச்சந்திப்பில் சமத்துவக் கட்சியின் தலைவர் சு.மனோகரன், கட்சியின்
செயற்பாட்டாளர் முன்னாள் போராளி பாலன் மாஸ்ரர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.




