இலங்கை தமிழரசுக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் முடிவில் மாற்றம் ஏற்படலாம் என அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பி்ல் அவர் மேலும் தெரிவிக்கையில், வருகின்ற மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக தாம் வர வேண்டும் என்ற ஆசை சுமந்திரனுக்கு வந்து விட்டது.
இந்தநிலையிலே, சுமந்திரனையா அல்லது சீ.வி.கே சிவஞானத்தையா தெரிவு செய்ய போகின்றார்கள் என்பது தெரியாது.
தற்போது, குறித்த இருவரில் யாரை தெரிவு செய்ய வேண்டும் என்ற நடவடிக்கைகளில் தமிழரசுக் கட்சி இறங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி…

