கொழும்பு(Colombo) – கிராண்ட்பாஸ் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் இருவர் காயமடைந்த நிலையில் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கிராண்ட்பாஸ் பகுதியில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காவல்துறை விசாரணை
இந்த சம்பவத்தில் மூவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் இன்று(26) உயிரிழந்துள்ளார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.