அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), பிரித்தானியாவுக்கு (United Kingdom) வரக்கூடாது என புகார் மனுவில் ஆயிரக்கணக்கான மக்கள் கையெழுத்திட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில், ட்ரம்ப் பிரித்தானியாவுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பிரச்சாரத்துக்கு பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா சென்றிருந்த பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer), பிரித்தானியா வருமாறு ட்ரம்புக்கு மன்னர் சார்லஸ் அளித்த அழைப்பிதழை அவரிடம் கையளித்துள்ளார்.
பிரித்தானிய வருகை
இருப்பினும், ட்ரம்பின் பிரித்தானிய வருகையை எதிர்த்து சுமார் 50 புகார் மனுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், அவை 50,000 கையெழுத்துக்களையும் பெற்றுவிட்டன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எதிரான கருத்துக்கள்
அத்தோடு, ட்ரம்ப் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே எதிர்ப்பு உருவாகியுள்ளது.
மேலும், ஜனநாயகத்துக்கு எதிரான கருத்துக்கள் கொண்டவரும், சட்டத்தையும் விதிகளையும் மதிக்காதவரும் ரஷ்யா (Russia) உக்ரைனை (Ukraine) ஊடுருவியதற்கு கண்டனம் தெரிவிக்காதவருமான ட்ரம்பை நமது நாடாளுமன்றம் வரவேற்கக்கூடாது என சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.