அரஙாங்கம் கொடுக்கும்வரை நிவாரணங்களை வழங்காமல் இருக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் (S. M. Marikkar) தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த பேரிடர் நிலைமை 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல்களைப் போன்று தீவிரமான சம்பவம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ராஜபக்சக்களுக்கு எதிரான வழக்கு
அரசாங்கத்தை நம்பமுடியாது என்றும். எங்களால் முடிந்த உதவிகளை செய்யவுள்ளோம் எனவும் கூறியுள்ளார்.

நாங்கள் எங்கள் பிரதேச மக்களுக்கு இன்றுவரை உதவிகளை வழங்கியுள்ளோம் என்றும், எதிர்வரும் நாட்களில் வழங்குவோம் எனவும் கூறியுள்ளார்.
அத்தோடு, களனி கங்கையை சுற்றியுள்ள மக்களுக்கு எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.

