பல்கலைக்கழக மாணவர்கள் மஹாபொல புலமைப்பரிசில் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்குரிய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது
குறித்த விடயம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (University Grants Commission) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பதற்குரிய கால அவகாசம்
அந்தவகையில் 2024/2025 ஆம் கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழகத்துக்குத் தகுதி பெற்ற மாணவர்களுக்குரிய மஹாபொல புலமைப்பரிசில் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்குரிய கால அவகாசமே நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பிப்பவர்கள் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமையுடன் காலக்கெடு நிறைவடையவிருந்தமை குறிப்பிடத்தக்கது.